முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 மயில்களை விஷம் வைத்து கொன்றவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 மயில்களை விஷம் வைத்துக் கொன்ற ஒருவரை வனத்துறையினர் இன்று கைது செய்தனர்.

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 மயில்களை விஷம் வைத்து கொன்றவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 மயில்களை விஷம் வைத்துக் கொன்ற ஒருவரை வனத்துறையினர் இன்று கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:41 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 மயில்களை விஷம் வைத்துக் கொன்ற ஒருவரை வனத்துறையினர் இன்று கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள டி.மானகசேரியைச் சேர்ந்தவர் இருளாண்டி (49). இவரது ஒரு ஏக்கர் தோட்டத்தில் சோளம் பயிரிட்டுள்ளார். இதனை மயில்கள் வந்து திண்பதை அறிந்த இருளாண்டி, சோளத்தில் விஷத்தை தடவி ஆங்காங்கே போட்டு வைத்திருந்துள்ளார். இதனை சாப்பிட்ட 6 ஆண் மற்றும் 6 பெண் மயில்கள் தோட்டத்தில் உயிரிழந்து கிடந்தது.

இது குறித்து அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் பாண்டியராஜன் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த மயில்களை வனச்சரக அலுவலகம் கொண்டு வந்தார். இவைகளுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருளாண்டியை கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →