முகப்பு
தற்போதைய செய்திகள்

விராலிமலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

விராலிமலை நான்கு வழிச்சாலை அருகே திங்கள்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:42 AM
பகிர்:

விராலிமலை நான்கு வழிச்சாலை அருகே திங்கள்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.

விராலிமலை- மதுரை நான்கு வழிச்சாலை, விராலூர் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக விராலிமலை காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளர் அ.மா. செந்தில்மாறன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு  திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மீட்கப்பட்ட சடலம் யார் என்று தெரியவில்லை.

மேலும் சடலத்தின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயங்கள் இருப்பதால் யாராவது கொலை செய்து வீசி சென்றிருக்கலாமா? என போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.