முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏப்.15 முதல் காவல் துறையில் குற்றப் பதிவேடுகளை பாதுகாக்க புதிய முறை அமல்

குற்றப் பதிவேடுகளை நீண்ட நாள்களுக்கு பாதுகாக்க ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சிசிடிஎன்எஸ் (குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் வலை பின்னல் அமைப்பு )என்ற புதிய முறை காவல் துறையில் அமல்படுத்தப்படவுள்ளது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:55 PM
பகிர்:

கோவை: குற்றப் பதிவேடுகளை நீண்ட நாள்களுக்கு பாதுகாக்க ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சிசிடிஎன்எஸ் (குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் வலை பின்னல் அமைப்பு )என்ற புதிய முறை காவல் துறையில் அமல்படுத்தப்படவுள்ளது.

சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திருநெல்வேலி, திருச்சி, மதுரை உள்ளிட்ட 7 மாநகர காவல் ஆணையர் அலுவலகம், தமிழகத்தின் 32 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் இந்த திட்டத்தின் மூலம் இணைக்கப்படவுள்ளது.

இதில், காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் அனைத்தும் கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு மனு தாரக்களுக்கு எண் வழங்கப்படும்.

அந்த எண்ணைக் கொண்டு தங்களது புகார்களின் நிலை குறித்து எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

இதனிடையே, தற்போது வரை காவல் துறையில் கொடுக்கப்படும் புகார்கள் அனைத்தும் தாள்களில் எழுது வைப்பதால் நாளடைவில் அழிந்து விடும் நிலை ஏற்படுகிறது. அதே போல், காவல் நிலையங்களிலும் கோப்புகளை நீண்ட நாள்களுக்கு பாதுகாப்பதிலும் சிரமம் நிலைவி வந்தது.

எனவே, இந்த புதிய முறை அமல் படுத்தப்பட்டால் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட அனைத்து புகார்களின் விவரங்களை கணினி மூலம் எளிதாக கண்டறியலாம். அதே போல், குற்றவாளிகளின் புகைப்படம் மற்றும் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்து வைப்பதால் தேவைப்படும் போது எளிதில் எடுத்துக்கொள்ளலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →