முகப்பு
தற்போதைய செய்திகள்

தேசிய கணினிப் பாதுகாப்பு தர மைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நியமனம்

ஸ்ரீவில்லிபுத்தூர்.புதுதில்லியில் உள்ள தேசிய கணினி பாதுகாப்பு தர மைய ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தற்போதைய செய்திகள்

தேசிய கணினிப் பாதுகாப்பு தர மைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நியமனம்

ஸ்ரீவில்லிபுத்தூர்.புதுதில்லியில் உள்ள தேசிய கணினி பாதுகாப்பு தர மைய ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்.புதுதில்லியில் உள்ள தேசிய கணினி பாதுகாப்பு தர மைய ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் தலைமையில், தேசிய கணினி பாதுகாப்பு தர மையம் செயல்பட்டு வருகிறது. மையத்தின் உயர்மட்டக் குழு புதுதில்லியில் கூடி, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் குறித்த கலந்தாய்வை நடத்தியது. இதில் விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் ச.சரவணசங்கர் (படம்) மற்றும் பதிவாளர் வெ.வாசுதேவன் (படம்) ஆகியோரை மையத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமித்து அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

உறுப்பினர்கள், இந்தியாவில் கணினி பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தி பாதுகாக்கவும், வலைதளங்களை எல்லாத் துறையிலும் பயன்படுத்தவும், நாட்டில் கணினியின் பயன்பாட்டு குற்றங்கள் ஏற்படாது தடுக்கவும் ஆலோசனைகள் வழங்குவார்கள்.

தேசிய கணினி பாதுகாப்பு தர மைய ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்ப்டடுள்ள துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோரை திங்கள்கிழமை பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் க.ஸ்ரீதரன், இயக்குநர்கள் டாக்டர் எஸ்.சசி ஆனந்த், எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.

முழு கட்டுரையைப் படிக்க →