முகப்பு
தற்போதைய செய்திகள்

எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்: சி.மகேந்திரன்

தமிழ்நாட்டில் பிளவை உருவாக்கி, மோசமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கூறினார்.

தற்போதைய செய்திகள்

எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்: சி.மகேந்திரன்

தமிழ்நாட்டில் பிளவை உருவாக்கி, மோசமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கூறினார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

தமிழ்நாட்டில் பிளவை உருவாக்கி, மோசமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கூறினார்.

வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஜேஎன்யு மாணவர் அமைப்பின் தலைவர் கன்னையா குமார் கைது விவகாரம் உள்ளிட்டவற்றில் பாரதீய ஜனதா கட்சி நேருக்கு நேர் சந்திக்க இயலாமல் கொல்லைப் புறமாக வந்து மோசமான அரசியல் செய்து வருகிறது. பா.ஜ.க.யின் தேசிய செயலாளர் எச்.ராஜா, தொடர்ந்து தமிழ்நாட்டில் மோசமான ஒரு சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்.

இவரது நடவடிக்கைகள் எரிச்சலூட்டி பிளவை உண்டாக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுவதாக உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராஜாவின் மகள் மீது மோசமான அவதூறுகளைக் கூறி அவரைக் கைது செய்யக் கூறுகிறார். டி.ராஜா, தமிழகம் வந்தால் அவருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்கிறார்.

கம்யூனிஸ்டுகளிடையே மோதலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடு பேசி வருகிறார். இவரை தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றார் அவர். அப்போது உடன் கட்சியின் மாவட்டச் செயலாளர் தி.ராமசாமி உடனிருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →