முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக புதுவையில் விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்

தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் இன்று சட்டப்பேரவை அருகே அரை நிர்வாண ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 18 ஏப்ரல், 2017 at 3:28 PM
பகிர்:

தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் இன்று சட்டப்பேரவை அருகே அரை நிர்வாண ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிரைவேற்ற வேண்டும், புதுச்சேரியை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு ரூ.13.5 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 100 நாள்கள் திட்டத்தை 150 நாள்களாக மாற்ற வேண்டும், வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், கரும்புக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க வேண்டும் உள்பட மத்திய, மாநில அரசுகளை தூக்கத்தில் இருந்து எழுப்பும் வகையில் அரைநிர்வாண ஒப்பாரி போராட்டம் நடைபெறறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.