இலங்கை சிறையில் இருந்து 69 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 69 பேர் இரண்டாம் கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 69 பேர் இரண்டாம் கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால், நாகை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். 20 மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
மீதமுள்ள 71 மீனவர்கள் புத்தாண்டிற்குள் விடுவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.