மிரட்டும் பருவமழை: மாநகராட்சி அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும்
மழை காரணமாக மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஆலோசனைகூட்டத்தில் அமைச்சர் வேலுமணி, ஜெயக்குமார் , உதயகுமா், மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்,காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் கலந்து கொண்டுள்ளனர்.