முகப்பு
தற்போதைய செய்திகள்

துணை வேந்தர் நியமனத்தில் உள்நோக்கம், விதிமீறல் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

துணை வேந்தர் நியமனத்தில் உள்நோக்கம் மற்றும் விதிமீறல் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

Updated On : 9 ஏப்ரல், 2018 at 4:11 PM
பகிர்:

துணை வேந்தர் நியமனத்தில் உள்நோக்கம் மற்றும் விதிமீறல் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறும் போது, தேடுதல் குழு பரிந்துரைப் பட்டியலில் இருந்தே துணை வேந்தர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என அவர் கூறியுள்ளார். 

இசைப் பல்கலைக்கழக துணைவேந்தராக பிரமிளா நியமிக்கப்பட்டதில் விதிமீறல் இல்லை. பிரமிளா தந்தை தமிழர், தாய் கேரளாவைச் சேர்ந்தவர்.  இசை பல்கலை. துணை வேந்தர் பிரமிளா சென்னை ராணி மேரி கல்லூரியில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

மேலும் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நமக்கு சாதகமாக கூறியுள்ளது. தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.