துணை வேந்தர் நியமனத்தில் உள்நோக்கம், விதிமீறல் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
துணை வேந்தர் நியமனத்தில் உள்நோக்கம் மற்றும் விதிமீறல் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
துணை வேந்தர் நியமனத்தில் உள்நோக்கம் மற்றும் விதிமீறல் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறும் போது, தேடுதல் குழு பரிந்துரைப் பட்டியலில் இருந்தே துணை வேந்தர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என அவர் கூறியுள்ளார்.
இசைப் பல்கலைக்கழக துணைவேந்தராக பிரமிளா நியமிக்கப்பட்டதில் விதிமீறல் இல்லை. பிரமிளா தந்தை தமிழர், தாய் கேரளாவைச் சேர்ந்தவர். இசை பல்கலை. துணை வேந்தர் பிரமிளா சென்னை ராணி மேரி கல்லூரியில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
Advertisement
மேலும் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நமக்கு சாதகமாக கூறியுள்ளது. தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என கூறினார்.