தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும் என

ANI

புதுதில்லி: தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தில்லியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் ஏழைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தில்லியில் அரசு மானியமாக அளித்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

மேலும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசுக்கும் இடையேயான இந்த ஒப்பந்தம் மீறப்பட்டாலோ, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு பாரபட்சமாக சிகிச்சை அளிக்கப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவை குறித்தும், இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறதா என்பதையும் கண்காணித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என தில்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT