தற்போதைய செய்திகள்

பொருளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டம் எங்கே? - ப.சிதம்பரம் கேள்வி

இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிப்பதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

DIN


புதுதில்லி: இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிப்பதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் தனது குடும்பத்தினர் உதவியுடன் சமூக ஊடகமான டிவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளதாவது: இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது, இந்திய பொருளாதார சரிவால் ஏழைகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைவான ஊதியம், குறைந்த முதலீடு, வர்த்தகம் குறைவால் சாமானிய ஏழை, எளிய மக்களும், நடுத்தர மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சரிவில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டம் எங்கே? எப்போது திட்டமிடப்படும்? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

அழகே.. ஐஸ்வர்யா மேனன்!

கருப்பில் ஜொலிக்கும் வெண்ணிற தேவதை.. ஸ்ருதி ஹாசன்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT