முகப்பு
தற்போதைய செய்திகள்

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ பறிமுதல்: கர்ப்பிணிப் பெண் போராட்டம்

தேனி மாவட்டம் போடியில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:


போடி: தேனி மாவட்டம் போடியில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். ஆட்டோவை விடுவிக்க கோரி கர்ப்பிணி பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில்  கார்த்திகா என்ற கர்ப்பிணி பெண் சிகிச்சைக்காக சென்ற போடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆட்டோவில் சென்ற போது ஆட்டோவை வழிமறித்து காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனர்  சதீஸ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கர்ப்பிணிப் பெண் என்று பாராமல் அவரை இறக்கி விட்டனர். 

ஆட்டோவையும், ஆட்டோ ஓட்டுநரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் நடைபயணமாக போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற கார்த்திகா, தான் வந்த ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்ததை அறிந்து நடந்தே போடி நகர் காவல் நிலையத்திற்கு வந்து நின்று ஆட்டோவை விடுவிக்கும் படி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதான படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தேனி எஸ்.பி. சாய் சரன் தேஜஸ்வி கூறுகையில்,  மேற்படி ஆட்டோ ஓட்டுநர் கர்ப்பிணியை இறக்கிவிட்டு காத்திருக்காமல் சுற்றியதால் பறிமுதல் செய்தோம். மேலும் பொதுமக்கள் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் அல்லது காவல்துறை உதவியை நாடினால் உரிய  நடவடிக்கை எடுப்போம். ஆட்டோவை அனுமதித்தால் அனைத்து ஆட்டோநர்களும் இப்படி கிளம்பி விடுவார்கள் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →