தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து; ஓட்டுநர் பலி

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகஸ்ட்.1: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் கவிழ்ந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் வன்னியம்பட்டி காவல் நிலையம் அருகே தனியார் மில் ஒன்று உள்ளது. இந்த மில்லுக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் சங்கரன்கோவில் தாலுகா பெரும்பத்தூர் கிராமத்தைச் சார்ந்த ராஜதுரை (38 வயது) என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். 

இன்று (சனிக்கிழமை) பணியாளர்களை ஏற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுரைக்காய்பட்டி கிராமத்திற்கு வேனை ஓட்டி சென்றார். 

கரிசல்குளம் அருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

தகவலறிந்து நத்தம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஓட்டுநரின் பிரேதத்தை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT