சமஜ்வாத் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான அமர் சிங்கிற்கு இந்திய ரானுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
சமஜ்வாத் கட்சியின் மூத்த தலைவர் அமர் சிங் (வயது 64). இவர் மக்களவை உறுப்பினராகவும் உள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி சிங்கப்பூரில் காலமானார். அவருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூரில் இருந்து ஞாயிற்றுக் கிழமை அவரது உடல் இந்தியா கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்திய ரானுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இறுதி அஞ்சலி செலுத்தினார்.