முகப்பு
தற்போதைய செய்திகள்

கடையம் அருகே கிணற்றில் விழுந்த மான் மீட்பு

கடையம் அருகே தெற்கு மடத்தூர் கிராமத்தில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்த சுமார் ஒன்றரை வயது பெண் மான் குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

Updated On : 14 ஆகஸ்ட், 2020 at 2:47 PM
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மான்குட்டியுடன் வனத்துறையினர்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:37 PM

அம்பாசமுத்திரம் : கடையம் அருகே தெற்கு மடத்தூர் கிராமத்தில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்த சுமார் ஒன்றரை வயது பெண் மான் குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள செல்லத் தயார் புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் தெற்கு மடத்தூர் கிராமத்தில் உள்ளது. தோட்டத்தில் கடலை பயிரிட்டுள்ளார். இன்று காலை ஆறுமுகம் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றபோது கிணற்றில் மான் குட்டி ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்ததாம். 

இதுகுறித்து உடனடியாக கடையும் நரகத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து வனச்சரகர்(பொ) பரத் உத்தரவின்பேரில் வனக்காப்பாளர் மணி வனப் பாதுகாவலர்கள் ரமேஷ், சேகர், வேட்டை தடுப்பு காவலர்கள் இசக்கி, ரவி அருணன் உள்ளிட்டோர் விரைந்து சென்று கிணற்றில் விழுந்த சுமார் ஒன்றரை வயது பெண் மான் குட்டியை பத்திரமாக மீட்டனர். 

Advertisement

மீட்கப்பட்ட மான் குட்டியை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று கால்நடை மருத்துவரிடம் பரிசோதித்து அடர்ந்த வனப்பகுதியில் விட ஏற்பாடு செய்து வருகின்றனர்.

மேலும், கடையம் அருகே தெற்கு மடத்தூர் பகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. 

இந்த மான்கள் அந்தப் பகுதியில் விவசாயப் பயிர்களை அழித்து நாசப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் இதனால் இந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மான்களைப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்றும் விவசாயிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.