முகப்பு
தற்போதைய செய்திகள்

கொல்கத்தாவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

கொல்கத்தா பெலியகட்டா பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் வயதான பெண் ஒருவர் பலியானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
இடிந்து விழுந்த பழமையான கட்டடம்
பகிர்:

கொல்கத்தா பெலியகட்டா பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் வயதான பெண் ஒருவர் பலியானார்.

பெலியகட்டா பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் 70 வயதுடைய பெண், அவரது மகன் மற்றும் பேரன் வசித்து வந்தனர். 

கொல்கத்தாவில் கனமழை பெய்து வரும் நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில், பலத்த காயமடைந்த முதிய பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும், அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →