கரோனா பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்த சரியான சூழலில்லை என ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவிக் கொண்டுள்ளது. இந்நிலையில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில், ஆந்திர சட்டப்பேரவையில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்த சரியான சூழலில்லை என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆந்திர சட்டப்பேரவைக் கூட்டம் நவம்பர் 30 முதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.