நாகலாந்தை பதற்றமான பகுதியாக அறிவித்தது மத்திய அரசு
நாகலாந்து மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாகலாந்து மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் பதற்றமானவை என பிரகடனம் செய்த மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை 6 மாதத்திற்கு அமல்படுத்தியது.
இந்தச் சட்டம் அமலில் உள்ள இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படும். சந்தேகப்படும் நபர்களை கைது செய்யவும், விசாரணை நடத்தவும், சோதனை நடத்தவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.