பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்
இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிா்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிா்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவின் மோரெஸ்பியாவின் வடகிழக்கில் வெள்ளிக்கிழமை காலை 8.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவுகோலில் 7.1 அலகுகளாக பதிவானதாக தேசிய நில அதிா்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கடலோர பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.