முகப்பு
தற்போதைய செய்திகள்

விழுப்புரம் அருகே லாரி ஓட்டுநர் அடித்துக்கொலை

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் தமிழ்ச்செல்வன்(30). லாரி ஓட்டுநரான இவர் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:45 PM
பகிர்:


விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் தமிழ்ச்செல்வன்(30). லாரி ஓட்டுநரான இவர் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மேல்பாதி பகுதி சமத்துவபுரம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சனிக்கிழமை காலை தகவலறிந்த வளவனூர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் அப்பகுதியில் மது அருந்திய போது ஏற்பட்ட முன்விரோத தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments