முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிமுக ஆட்சி அமைந்த உடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: எஸ். பி. வேலுமணி

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி கூறியது குறித்து...

Updated On : 4 ஏப்ரல் 2026, 10:44 am IST
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி - டிஎன்எஸ்
பகிர்:

மேட்டுப்பாளையம்: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி பங்கேற்று பேசினார். மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னராசுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பின்னர் அவர் பேசுகையில், ஐம்பது ஆண்டுகளுக்கான வளர்ச்சியை அதிமுக ஆட்சி வழங்கியுள்ளது. ஏராளமான தரமான பாலங்கள், சாலைகள் போடப்பட்டுள்ளது. ஆகவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். ஆட்சி அமைந்த உடன் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். இதில் அனைத்து உள்ளாட்சி பதவிகளிலும் அதிமுகவினரே வெற்றி பெற்றுவார்கள் என்று அவர் கூறினார்.

Advertisement

Advertisement

summary

Local body elections will be held immediately after the AIADMK forms the government says former minister S.P. Velumani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.