FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது குறித்து...

Updated On : 4 ஏப்ரல் 2026, 10:21 am IST
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற பட்டாபிஷேக விழா - டிஎன்எஸ்
பகிர்:

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபாட்டனர்.

அறுபடை வீடுகளில் முதற்படை வீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, நாள்தோறும் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Advertisement

Advertisement

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபாட்டனர். - டிஎன்எஸ்

இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் கோயிலில் அமைந்துள்ள திருவாச்சி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது

விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய முருகபெருமானுக்கு நவரத்தினங்களுடன் கூடிய கிரீடம் மற்றும் செங்கோல் வழங்கி வேதமந்திரங்களோடு, மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டு பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

முருகபெருமான் பட்டாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு "அரோகரா கோஷம் முழங்கிட முருகனை வழிபட்டனர்.

தொடர்ந்து விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக நாளை (ஏப். 4) திருக்கல்யாணமும், நாளை மறுநாள் (ஏப்.5) திருத்தேரோட்டமும் விமர்சையாக நடைபெறவுள்ளது.

விழா ஏற்பாடுகள் கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழு மேற்பார்வையில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

summary

Pattabhishekam at Thiruparankundram Murugan Temple: Large Crowds of Devotees Participate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments