குமரி கடற்கரையில் நடைப்பயிற்சி: மக்களிடம் வாக்கு சேகரித்த மு.க. ஸ்டாலின்!
குமரி கடற்கரையில் நடைப்பயிற்சி சென்று மக்களிடம் வாக்கு சேகரித்த மு.க. ஸ்டாலின்...
கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்ட நிலையில் அங்கிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி கட்சித் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திருவாரூரில் பிரசாரத்தைத் தொடங்கிய நிலையில் திருச்சி, கரூரைத் தொடர்ந்து நேற்று(ஏப்ரல் 3) முதல் தென் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
Advertisement
நேற்று நெல்லை - பாளையங்கோட்டையில் பிரசாரம் செய்த அவர் இன்று காலை கன்னியாகுமரி சென்றார்.
காலை குமரி கடற்கரை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். குறிப்பாக மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து நாகர்கோயிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு சங்கரன்கோவில், நாளை (ஞாயிறு) காலை 9 மணிக்கு விருதுநகர், மாலை 5 மணிக்கு மதுரை திருமங்கலம் பகுதியில் முதல்வர் பிரசாரம் செய்கிறார்.