விழுப்புரம் சின்ன கோட்டகுப்பத்தில் புதுச்சேரியைச் சேர்ந்தவர் வெட்டிக் கொலை
விழுப்புரம் மாவட்டம் சின்ன கோட்டகுப்பத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரை மர்ம கும்பல் ஞாயிற்றுக்கிழமை வெட்டி கொலை செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சின்ன கோட்டகுப்பத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரை மர்ம கும்பல் ஞாயிற்றுக்கிழமை வெட்டி கொலை செய்துள்ளது.
கொலை செய்யப்பட்ட நபர் புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த ரமேஷ்(40) என்பது கோட்டக்குப்பம் காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடலை கைப்பற்றிய காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிந்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
ரவுடிகளுக்குள் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.