தற்போதைய செய்திகள்

தவறான மருந்தை சாப்பிட்ட பிளஸ் 1 மாணவர் பலி

DIN

மதுரை மாவட்டம் தேனூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிச்சுமணி.இவரது மகன் (16) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அண்மையில் பள்ளி மாணவனுக்கு ஏற்பட் உடல்நலக்குறைவுக்கு, மருத்துவர்கள் சத்து டானிக் சாப்பிட அறிவுறுத்தியுள்ளனர். 

அதன்படி மாணவர் டானிக்கை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாணவர் தவறுதலாக வேறு டானிக்கை சாப்பிட்டுள்ளார். இதில் மயங்கி விழுந்த மாணவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதித்தனர். 

அங்கு மாணவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் கடந்த 2 நாள்களாக சிகிச்சையில் இருந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அலங்காநல்லூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT