முகப்பு
தற்போதைய செய்திகள்

மாலத்தீவில் இருந்து மேலும் 198 இந்தியர்கள் தூத்துக்குடி வருகை

சமுத்திர சேது ஆபரேசன் மூலம் மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்களை அழைத்து கொண்டு ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படை கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது.

Updated On : 23 ஜூன், 2020 at 2:27 PM
பகிர்:

சமுத்திர சேது ஆபரேசன் மூலம் மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்களை அழைத்து கொண்டு ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படை கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது.

இதில் 198 இந்தியர்கள் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 195 பேர் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் உட்பட 198 பேர் வந்து உள்ளனர். இவர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும். 

இதனை தொடர்ந்து குடியுரிமை சோதனைக்கு பின்னர் தங்களது சொந்த ஊர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைக்கப்படுவர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.