நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 36 பேருக்கு கரோனா
நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 36 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம்
நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 36 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உதகையில் உள்ள இரு அரசு மருத்துவமனைகளில் 36 பேர் வியாழக்கிழமை காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒருவர் மருத்துவ அலுவலர். மற்றவர்களில் 2 பேர் காவல்துறை உதவி ஆய்வாளர்கள், 5 பேர் காவலர்கள் மற்றும் 2 பேர் ஊர்க்காவல் படையினர்.
இதையடுத்து குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.