திருச்சியில் காவலர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் ஷேக் அப்துல்லா (38).
திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் ஷேக் அப்துல்லா (38) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் ஷேக் அப்துல்லா (38).
திருச்சி விமான நிலையப் பகுதியல், வயர்லெஸ் சாலை, அண்ணா நகர் பகுதியில் மனைவி சர்மிளா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
பணி முடிந்து சனிக்கிழமை இரவு வீடு வந்த அவர் நள்ளிரவு 1 (ஞாயிறு அதிகாலை) மணியளவில், அவரது வீட்டில் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விமான நிலைய போலீஸார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.