தற்போதைய செய்திகள்

போடியில் மீண்டும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி

DIN


தேனி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிள்ள நிலையில், போடியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்.1-ஆம் தேதி முதல் ஏப்.17-ஆம் தேதி வரை 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். இதில், போடியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 42 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்த நிலையில், போடியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சனிக்கிழமை, தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர், போடி அரசு மருத்துவமனை முன்பு இட்லிக் கடை வைத்து விற்பனை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT