இந்தியாவில் ஏஸர் எண்டிரோ என் 3 மடிக்கணினி அறிமுகம்
தைவான் தொழில்நுட்ப நிறுவனமான ஏஸர், 14 அங்குல எண்டிரோ என் 3 மடிக்கணினியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்.
தைவான் தொழில்நுட்ப நிறுவனமான ஏஸர், 14 அங்குல எண்டிரோ என் 3 மடிக்கணினியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்.
எண்டிரோ என் 3 மாதிரி மடிக்கணினியானது இந்திய மதிப்புப்படி ரூ. 76,500 க்கு விற்கப்படுகிறது.
இந்த மடிக்கணினி, தண்ணீர் எந்தக் கோணத்திலும் உள்ளே செல்லாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
கட்டட கலைஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் இயற்கை புகைப்பட கலைஞர்கள் போன்றோர் உபயோகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மடிக்கணினி இண்டெல் கோர் 10வது ஜெனரேஷன் செயலி மூலம் இயக்கப்படுகிறது.
இந்த மடிக்கணினி குறித்து ஏசர் நிறுவனத்தின் இந்திய தலைமை வணிக அதிகாரி சுதிர் கோயல் கூறுகையில்,
“எண்டிரோ என் 3 மடிக்கணினியானது குறிப்பாக வெளிவேளைகளுக்கு எடுத்து செல்லுவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1.9 கிலோ எடை கொண்ட இந்த மடிக்கணினி உயர் வெப்பநிலை மற்றும் தண்ணீர் பட்டால் ஏதும் ஆகாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.