முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர்

ஜம்மு-காஷ்மீரில் நக்ரோட்டா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையிலான துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த காவலர்களை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேரில் சந்தித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:54 PM
மருத்துவமனைக்கு வந்து வீரர்களின் உடல்நலம் குறித்து விசாரித்த துணைநிலை ஆளுநர்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் நக்ரோட்டா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையிலான துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த காவலர்களை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேரில் சந்தித்தார்.

ஜம்மு - காஷ்மீரின் நக்ரோட்டா மாவட்டத்திலுள்ள பான் சோதனைச் சாவடியில் இருந்த காவலர்கள் மீது தீவிரவாதிகள் இன்று அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பின்னர் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் குல்தீப் ராஜ், முகமது இசாக் ஆகிய இரண்டு காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்த காவலர்கள் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் மருத்துவமனைக்கு நேரில் சென்று வீரர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →