தற்போதைய செய்திகள்

‘பாஜக அரசிற்கு எதிரான கட்சிகளை அணி திரட்டுவேன்’: சந்திரசேகர் ராவ்

ANI

பாஜக அரசிற்கு எதிரான கட்சிகளை அணி திரட்டுவேன் என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவின் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் பேசிய சந்திரசேகர் ராவ் கூறியதாவது:

“ரயில் நிலையத்தில் நான் தேநீர் விற்றேன் என கூறிய மோடி தற்போது ரயில் நிலையத்தை விற்கின்றார். பொதுப் பணித்துறைகளின் பங்குகளை விற்பது மற்றும் ரயில்வே துறையை தனியார்மையமாக்குவது போன்றவற்றை மத்திய அரசு செய்து வருகின்றது. தற்போது அதற்கான அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்தியாவில் பாஜகவிற்கு எதிராக உள்ள அனைத்து கட்சித் தலைவர்களிடமும் பேசி, டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ஹைதராபாத்தில் எதிர் கட்சிகளின் மாநாட்டை நடத்துவேன்.

மோடி அரசிற்கு எதிராக அணி திரண்டு நிற்க, தெலுங்கானா ராஷ்டிர சமிதி போராடும்” என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியுடன் நேருக்கு நேர் விவாதம்: ராகுல் காந்தி சம்மதம்!

வயது முதிர்ந்த போதிலும்... எம்.எஸ்.தோனிக்காக சிஎஸ்கேவின் தரமான பதிவு!

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

ஈடன் கார்டன்ஸில் மழை; போட்டி நடைபெறுமா?

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு? தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை

SCROLL FOR NEXT