வேதாரண்யம் அருகே படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்
வேதாரண்யத்தை அடுத்த நாலுவேத பதி கடற்கரையில் செவ்வாய்க்கிழமை படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர் குறித்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த நாலுவேத பதி கடற்கரையில் செவ்வாய்க்கிழமை படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர் குறித்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இலங்கை யாழ்பாணம், வல்வெட்டிதுறை, ஆதி கோயிலடிதெருவைச் சேர்ந்தவர் மீனவர் க. விஜயமூர்த்தி (வயது 23).
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இவரது படகு பழுதாகி கடல் சீற்றத்தால் நாலுவேத பதி கடற்கரையில் கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், இவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.