முகப்பு
தற்போதைய செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறப்பு 3,000 கனஅடியாக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
செம்பரம்பாக்கம் ஏரி
பகிர்:

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் தாக்கத்தால் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகின்றது. இதனால், இன்று நண்பகல் 12 மணிக்கு வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,400 கனஅடி வருவதால் படிப்படியாக தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மதியம் 3 மணியளவில் வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதையடுத்து தற்போது வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →