கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சார்ஜாவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணியில் மந்தீப், பரபிசிம்ரன் மற்றும் முஜிபிற்கு பதில் முருகன் அஸ்வின், கெயில் மற்றும் ஹோடா சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு அணியில் மாற்றம் ஏதும் இல்லை.