முகப்பு
தற்போதைய செய்திகள்

நவ.2 முதல் டோக்கியோ-தில்லி விமான சேவை தொடக்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து இந்திய தலைநகர் தில்லிக்கு வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி முதல் ஏர் இந்தியா விமான சேவையை இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து இந்திய தலைநகர் தில்லிக்கு வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி முதல் ஏர் இந்தியா விமான சேவையை இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில்,

ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் நவம்பர் 2 முதல் டிசம்பர் 28 வரையில் டோக்கியோவிலிருந்து தில்லி வரையிலும், நவம்பர் 4 முதல் டிசம்பர் 30 வரை தில்லியில் இருந்து டோக்கியோ வரை தனது சிறப்பு விமான சேவையின் அட்டவணையை அறிவித்துள்ளது.

இந்தியாவும் ஜப்பானும் இப்போது 'ஏர் பப்பில்' அமைப்பின் ஒரு பகுதியாகும். ஜப்பானில் உள்ள இந்திய தூதரகத்தில் பயணிகள் பதிவு செய்ய தேவையில்லை, மேலும் முன்பதிவை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் நேரடியாக செய்யப்பட வேண்டும் என ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →