முகப்பு
தற்போதைய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் பாக். அரசுக்கு நேரடி தொடர்பு : பாக். அமைச்சர் ஒப்புதல்

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் செளத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:44 PM
பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் செளத்ரி
பகிர்:

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் செளத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடந்த  2019ஆம் ஆண்டு இந்தியாவின் புல்வாமா பகுதியில் பயங்கிரவாத தாக்குதல் நடந்தது. இதில் இந்திய ரானுவத்தை சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் செளத்ரி பேசியபோது, புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், புல்வாமா தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதில், பாகிஸ்தான் அரசிற்கு பங்கு இருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

பாகிஸ்தான் அமைச்சரின் இந்த கருத்து இருநாட்டு அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.