ஹிமாச்சலப் பிரதேசத்தில் மேலும் ஓர் அமைச்சருக்கு கரோனா
ஹிமாச்சலப் பிரதேசத்தின் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர் மற்றும் அவரது மனைவிக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:14 PM
ஹிமாச்சலப் பிரதேசத்தின் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர் மற்றும் அவரது மனைவிக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தாக்கூர் தனது டிவிட்டர் பக்கத்திலும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
இவர் இரண்டு நாள்களுக்கு முன், சிம்லாவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சக அமைச்சர்களுடம் கலந்து கொண்டார்.
Advertisement
முன்னதாக, முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் சில அமைச்சர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.