தற்போதைய செய்திகள்

கடன் பிரச்னையால் சிறுநீரகத்தை விற்க முயன்ற தம்பதி : ரூ. 17 லட்சம் இழந்து சோகம்

DIN

ஆந்திரத்தில் கடன் பிரச்னையால் ரூ. 2 கோடிக்கு சிறுநீரகத்தை விற்க முயன்ற தம்பதிகள்  சேவைக் கட்டணமாக ரூ. 17 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் காமேஸ்வர் மற்றும் பார்கவி என்ற தம்பதியர்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் சொந்தமாக மருந்துக்கடை நடத்தி வந்தனர். இந்நிலையில் மருந்துக்கடையில் ஏற்பட்ட நஷ்டத்ததால், அந்தக் கடனை திரும்ப செலுத்த சிறுநீரகத்தை விற்க முயன்றனர்.

இந்நிலையில் சிறுநீரகம் விற்க புதுதில்லியில் உள்ள சக்ரா மருத்துவமனை ஒன்றைக் கண்டார்கள். இதில், சோப்ரா சிங் என்ற இடைத்தரகருடன் இணையத்தில் பேரத்தில் ஈடுபட்டனர். இதில், இறுதியாக ஒரு சிறுநீரகத்திற்கு ரூ. 2 கோடி தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

மேலும், ரூ. 2 கோடி பணத்தை அறுவை சிகிச்சைக்கு பின் வாங்கி தருவதாகவும், தற்போது நீங்கள் ரூ. 17 லட்சம் சேவைக் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதையடுத்து, தம்பதியினர் மேலும் கடன் வாங்கி கொடுத்துள்ளார்கள்.

மேலும், இந்த ஒப்பந்தத்தை முடிக்க மேலும் ரூ. 5 லட்சம் கேட்டதை அடுத்து காமேஸ்வரன் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

SCROLL FOR NEXT