தற்போதைய செய்திகள்

இந்திய முப்படைகளில் இதுவரை 19,839 பேருக்கு கரோனா

ANI

இந்திய முப்படைகளில் இதுவரை 19,839 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் மக்களவையில் கூறுகையில், 

இந்திய முப்படையான ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளை சேர்ந்த 19,839 பேர் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதில், ராணுவப் படையைச் சேர்ந்த 16,758 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 32 பேர் பலியாகியுள்ளனர். கடற்படையைச் சேர்ந்த 1,365 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 3 பேர் பலியாகியுள்ளனர். விமானப் படையைச் சேர்ந்த 1,716 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனாவால் உயிரிழந்த அனைத்து வீரர்களுக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT