பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்.30-ம் தேதி தீர்ப்பு 
தற்போதைய செய்திகள்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30-ம் தேதி தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளது.

PTI

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளது.

இதுகுறித்து சிபிஐ வழக்கறிஞர் லலித் சிங் கூறுகையில், 

பாபர் மசூதி இடிப்பின் அனைத்து விசாரணைகளும் செப்டம்பர் 1-ம் தேதி முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பு எழுதத் தொடங்கியுள்ளனர்.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் 351 சாட்சிகளும், 600க்கும் மேற்பட்ட ஆவண ஆதாரங்களைளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பானது வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கவுள்ளது என கூறினார்.

இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் செப்டம்பர் 30-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழையால் வெள்ளம்! தண்ணீரில் மிதந்து சென்ற உணவகம்! | Mexico

மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்! மரத்தில் மோதி விபத்து! 5 பேர் காயம்! | California

இட்லி கடை வெற்றியா? தோல்வியா?

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT