சேலத்தில் காவலர்களுக்கு சீருடையில் பொருத்தும் கேமிரா வழங்கல்
சேலத்தில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு சீருடையில் வைத்து கண்காணிக்கும் கேமிரா செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
தற்போதைய செய்திகள்சேலத்தில் காவலர்களுக்கு சீருடையில் பொருத்தும் கேமிரா வழங்கல்
சேலத்தில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு சீருடையில் வைத்து கண்காணிக்கும் கேமிரா செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
சேலத்தில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு சீருடையில் வைத்து கண்காணிக்கும் கேமிரா செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
சேலத்தில் பணியாற்றும் காவலர்கள் ரோந்து செல்லும் போது சீருடையில் வைத்து கண்காணிக்க ‘பாடி வொர்ன் கேமிரா’ இன்று காலை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கு வழங்கப்பட்டது.
இதனை வழங்கிய சேலம் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார் பேசியதாவது,
இந்த நவீன கேமராவை ரோந்து செல்லும்போது கட்டாயம் காவலர்கள் எடுத்துச் செல்லவேண்டும். இதை பயன்படுத்தாமல் விட்டுவிட கூடாது.
ரோந்து செல்லும் போது யாரும் குடிபோதையில் தகராறு செய்தாலோ அல்லது சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்போதோ இந்த கேமிரா மூலம் அந்த காட்சிகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு கேமிராவில் பதிவு செய்யப்படும் காட்சிகள் நீதிமன்றத்தில் காட்ட பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.