மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 2,382 பேருக்கு கருப்புப் பூஞ்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இதுவரை 2,382 பேர் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

தமிழகத்தில் இதுவரை 2,382 பேர் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா ஆய்வின்போது இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது,

தமிழக மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளதால், தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

மாநிலத்தில் கருப்புப் பூஞ்சையால் இதுவரை 2382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 111 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்கள் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நிலவரம்!

ஜக்தீப் தன்கர் எங்கே? அமித் ஷாவுக்கு சஞ்சய் ரௌத் கடிதம்

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் விபத்து: 2 போலீஸ் அதிகாரிகள் பலி

சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு - சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT