முகப்பு
தற்போதைய செய்திகள்

அவிநாசியில் லாரி-தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்து

அவிநாசியில் லாரி மீது தனியார் நிறுவன வாகன பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் சனிக்கிழமை 4 பேர் படுகாயமடைந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
விபத்துக்குள்ளான தனியார் நிறுவனப் பேருந்து
பகிர்:


அவிநாசி: அவிநாசியில் லாரி மீது தனியார் நிறுவன வாகன பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் சனிக்கிழமை 4 பேர் படுகாயமடைந்தனர்.

கோவையில் இருந்து சேலம் நோக்கி தனியார் நிறுவனப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அவிநாசி புறவழிச்சாலை பழங்கரை அருகே சென்றுகொண்டிருந்து போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் வந்த 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர். 

இது குறித்து அவிநாசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →