இந்தியாவில் கரோனாவுக்கு 329 மருத்துவர்கள் பலி
கரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 329 மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 329 மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றது. இதுவரை 2,87,122 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் இன்று இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட செய்தியில்,
நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் போது மொத்தம் 329 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் 30 முதல் 55 வயதுக்குள்பட்டவர்கள் ஆவார்.
அதில் அதிகபட்சமாக பிகார் மாநிலத்தில் 80 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.