தற்போதைய செய்திகள்

போச்சம்பள்ளி அருகே நீரில் மூழ்கி தந்தை, மகன் சாவு

DIN

போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி கிராமத்தில் மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் பொழுது, நீரில் மூழ்கி தந்தை, மகன் இருவரும் பலியான சம்பவம் ஊர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (42). இவர் தனது மகன் கிருபா (12)-க்கு அங்குள்ள விவசாய கிணற்றில் நீச்சல் கற்றுக்  கொடுத்துக்  கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராமல் இருவரும் நீரில் மூழ்கினர்.

தகவலறிந்த போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று  35 அடி தண்ணீர்  உள்ள விவசாய கிணற்றில் இருந்து  பெரியசாமி, கிருபா ஆகிய இருவரையும்  சடலமாக மீட்டனர் சடலங்களை கைப்பற்றி போலீசார், பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT