முகப்பு
தற்போதைய செய்திகள்

தொகுதிப் பங்கீடு: திமுக, விசிக இன்று பேச்சுவார்த்தை

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க - விடுதலை சிறுத்தைகள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

Updated On : 12 பிப்ரவரி, 2024 at 5:32 AM
பகிர்:

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க - விடுதலை சிறுத்தைகள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, தமிழகத்தில் தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. முதல் கட்டமாக கடந்த மாதம் 28-ஆம் தேதி காங்கிரஸுடன் திமுக பேச்சு நடத்தியது.

அதனைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க - விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.

அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க பேச்சுவார்த்தை நடத்துகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →