சிவன்கோயிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி 
தற்போதைய செய்திகள்

எம்எல்ஏ பழனி நலம் பெற வேண்டி கோயிலில் சிறப்பு பிரார்த்தனை

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எம்.எல்.ஏ. கே. பழனி நலம்பெற வேண்டி வெங்காடு பகுதியில் உள்ள சிவன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

DIN


ஸ்ரீபெரும்புதூர்: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எம்.எல்.ஏ. கே. பழனி நலம்பெற வேண்டி வெங்காடு பகுதியில் உள்ள சிவன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த கே.பழனி உள்ளார். இந்த நிலையில் பழனிக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாள்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், எம்.எல்.ஏ. கே.பழனி விரைவில் நலம்  பெற வேண்டி வெங்காடு அதிமுக  சார்பில்  வெங்காடு பகுதியில் உள்ள சிவன்கோயிலில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

ஸ்ரீபெரும்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வெங்காடு உலகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வெங்காடு பகுதியை சேர்ந்த அதிமுகவினர் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டு பழனி நலம் பெறவேண்டி பிரார்த்தனை செய்தனர். இதில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

வசீகரத்தின் உறைவிடம்... ஜொனிதா காந்தி!

சுவர் இருப்பின் சித்திரம்... நிகிதா ஷர்மா!

காஷ்மீரில் சண்டை எப்போது முடிவுக்கு வரும்? ஃபரூக் அப்துல்லா பதில்!

ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா

SCROLL FOR NEXT