80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய எழுத்தாளர் பெ.சு. மணி தனது 87ஆம் வயதில் தில்லியில் காலமானார்.
எழுத்தாளர் பெ.சு.மணி தமிழ் எழுத்தாளர்கள் வட்டத்தில் நன்கு அறியப்படுபவர். வ.வே.சு. ஐயரின் கட்டுரைக் களஞ்சியம், கம்பராமாயணக் கட்டுரைகள்` உள்ளிட்ட பல தொகுப்பு நூல்களை வெளியிட்டவர் பெ.சு.மணி `இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பழந்தமிழ் இதழ்கள், வீரமுரசு சுப்பிரமணிய சிவா, எழுத்திடைச் செழித்த செம்மல் கா.சி.வெங்கட்ரமணி` உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
வெ. சாமிநாத சர்மா மற்றும் ம.பொ.சி.யின் தீவிர ஆர்வலரான இவர் சாகித்ய அகாதமிக்காக ம.பொ.சி. பற்றியும் சாமிநாத சர்மா பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார்.
`பாரதியாரின் ஞானரதம் மூலமும் ஆய்வும், சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார்` போன்ற நூல்களும் இவரது படைப்புகளே. விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள், ஸ்ரீசாரதா தேவி, சுவாமி விபுலானந்தரின் தலையங்க இலக்கியம்` போன்றவை இவரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்.
எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியரான இவர் தினமணி நாளிதழில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்த இவர் செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக தில்லியில் காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.