திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியின் 89 ஆவது பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 89-ஆம் பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கி.வீரமணியின் துணைவியார் மோனாம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க | இதோ அரிய வாய்ப்பு... இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!
கி. வீரமணியின் 89-ஆம் பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கி.வீரமணியின் துணைவியார் மோனாம்மாள் ஆகியோர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பெரியார் எனும் பெரும் பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பயின்ற மாணவர். பகுத்தறிவு - சுயமரியாதைப் பாடங்களைப் தெளிவாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர். சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி.
இதையும் படிக்க | ‘விரைவில் நிலை மாறும், தலை நிமிரும்’: சசிகலா அறிக்கை
கருணாநிதியின் கொள்கை இளவல். நெருக்கடி நிலைக் காலத்து சித்திரவதைகளில் என்னைத் தாங்கிப் பிடித்த சக சிறைவாசி. எந்த நெருக்கடியிலும் தெளிவான கொள்கை வழிக்காட்டிடும் திராவிடப் பேரொளி.
11 வயதில் கைகளில் ஏந்திய இலட்சியக் கொடியை 89 ஆம் அகவையிலும் உறுதியாகப் பிடித்து, வருங்காலத் தலைமுறையினரிடம் பெரியாரைப் பரப்பும் பெருந்தொண்டர். தாய்க் கழகமாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நூறாண்டுகள் கடந்து நலமுடன் வாழ்க. தொண்டறம் தொடர்ந்திடுக.” எனத் தெரிவித்துள்ளார்.